சென்னை வீரர் தீபக் சாஹர் கரோனாவிலிருந்து மீண்டார்

 



கரோனா தொற்றிலிருந்து சிஎஸ்கே வீரரும், ஸ்விங் பவுலருமான தீபக் சாஹர் மீண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடருக்காக துபாய் சென்ற தோனி தலைமை சென்னை அணியில் தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று பாதித்தது.

இதனையடுத்து இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தோனி தலைமையில் மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளனர்.

இந்நிலையில் 2 கரோனா சோதனையிலும் தீபக் சாஹர் தேறினார், இதனால் தனிமைப்படுத்தலிலிருந்து வெளியே வந்த தீபக் சாஹர் சென்னை அணியுடன் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

ஆனால் இந்திய மருத்துவக் குழு தீபக் சாஹரை இன்னொரு முறை சோதனை செய்யும். ருதுராஜ் கெய்க்வாட் செப்12ம் தேதி அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments