தமிழகத்தில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தம் - அமைச்சர் செங்கோட்டையன்

 



தமிழகத்தில் வருகிற 21-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது என்றும், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கொரோனாவின் தாக்கம் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments