2019ல் இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை
இந்தியாவில் கடந்த ஆண்டில் ஒவ்வொரு 4 நிமிடத்திற்க்கும் ஒருவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக, தேசிய குற்றப் பதிவு ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், கடந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 39 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொண்டும், 4 லட்சத்து 21 ஆயிரம் பேர் விபத்துக்களிலும் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
போக்குவரத்து விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 85 சதவிதம் பேர் சாலை விபத்துக்களிலும், 15 சதவிதம் பேர் ரயில் போக்குவரத்து விபத்துக்களிலும் சிக்கியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ஐ காட்டிலும் கடந்தாண்டில் விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் விகிதம் 2 புள்ளி 3 சதவிதமும், தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 புள்ளி 4 சதவிதம் உயர்ந்துள்ளாதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments