ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வகுப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க உயர்நீதிமன்றம் யோசனை
Aug 20, 2020 07:06:33 PM
ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வகுப்புகளை குறைக்க யோசனை தெரிவித்துள்ள சென்னை - உயர்நீதிமன்றம், வீட்டுப்பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்களை குறைக்கவும், மாதாந்திர தேர்வுகளை தள்ளி வைக்கவும் அறிவுறுத்தி உள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
தொடர்சியாக கம்ப்யூட்டர் பார்ப்பதால் மாணவர்களுக்கு 'கம்ப்யூட்டர் விஷன் சின்ட்ரோம்' என்ற நோய் பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
எனவே அரசு பள்ளிகளை போல தனியார் பள்ளிகளும் தொலைக்காட்சி மூலம் பாடங்களை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், தனியார் பள்ளிகளுக்கு இது சாத்தியமில்லை என தெரி வித்து, வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.


0 Comments